குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனு


குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனு
x
தினத்தந்தி 7 July 2023 6:45 PM GMT (Updated: 7 July 2023 6:45 PM GMT)

குவைத்தில் இறந்தவரின் உடலை சொந்த ஊர் கொண்டுவரக்கோரி மனு அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூரை அடுத்த மணலூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராசபாண்டி. இவரின் மனைவி முத்துப்பாண்டியம்மாள் தனது மகன்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் வந்து கண்ணீர் மல்க கோரிக்கை மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது கணவர் குடும்ப வறுமை காரணமாக எனது நகைகளை விற்று கடன் வாங்கி குவைத் நாட்டிற்கு கூலி வேலைக்காக சென்றார். அங்கு சென்ற சில மாதங்கள் சம்பளம் வாங்கி அனுப்பிய நிலையில் கடந்த 6 மாதமாக பணம் அனுப்பவில்லை.

திடீரென குவைத்தில் வேலை பார்த்த இடத்தில் எனது கணவர் இறந்துவிட்டதாக தகவல் தெரிவித்தனர். சில நாட்களுக்கு முன்பு வரை நன்றாக இருந்த அவர் திடீரென்று எப்படி இறந்தார்? அதற்கான காரணம் என்ன? என்பது புரியாமல் தவித்து வருகிறோம். அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது கணவர் இறந்த நிலையில் நான் 3 குழந்தைகளுடன் வாழ வழியின்றி தவித்து வருகிறேன். எங்களின் வாழ்வாதாரத்திற்காக அவர் பணிபுரிந்த நிறுவனத்தில் இருந்தும், தமிழக அரசு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.


Related Tags :
Next Story