சைக்கிளில் பேரணியாக செல்லும் பெண் போலீசாருக்கு பெரம்பலூரில் வரவேற்பு


சைக்கிளில் பேரணியாக செல்லும் பெண் போலீசாருக்கு பெரம்பலூரில் வரவேற்பு
x

சைக்கிளில் பேரணியாக செல்லும் பெண் போலீசாருக்கு பெரம்பலூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர்

தமிழ்நாடு காவல்துறையில் பெண்களின் 50-வது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் விதமாக சென்னையில் இருந்து கன்னியாகுமரியை நோக்கி 100-க்கும் மேற்பட்ட பெண் போலீசார் சைக்கிளில் பேரணியாக புறப்பட்டனர். நேற்று மாலை பெரம்பலூர் மாவட்டத்துக்கு வருகை தந்த அவர்களை திருமாந்துறை சுங்கச்சாவடியில் மங்களமேடு போலீசார் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் அவர்கள் அருகே உள்ள தனியார் பள்ளியில் இரவு தங்கி ஓய்வெடுத்தனர். இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவர்கள் திருச்சிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.


Next Story