குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி


குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதி
x

குண்டும், குழியுமான சாலையால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள பாளையம்பட்டி ஊராட்சி வடக்குத்தெரு, பள்ளன் கோவில் தெரு ஆகிய பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் செல்வோர், மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெரிதும் அவதிப்படுகின்றனர். சேதமடைந்த சாலையில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி பழுதாகின்றன. ஆதலால் பெரிய அளவில் விபத்து எதுவும் நிகழ்வதற்கு முன்னதாக சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் ேகாரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story