ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதி


ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதி
x

நீடாமங்கலத்தில் என்ஜின் திசைமாற்றும் பணி: ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பயணிகள் அவதி

திருவாரூர்

நீடாமங்கலம்:

நீடாமங்கலத்திற்கு வந்த சரக்கு ரெயிலின் என்ஜின் திசைமாற்றும் பணி நடந்தது. அதேசமயம் மேலும் ஒரு சரக்கு ரெயிலும் சென்றது. பின்னர் சரக்கு ரெயிலின் என்ஜின் திசை மாற்றப்பட்டு மன்னார்குடிக்கு புறப்பட்டு சென்றது. இதனால் நீடாமங்கலம் ரெயில்வே கேட் நேற்று காலை 4.50 மணிக்கு மூடப்பட்டது. பின்னர் பணிகள் முடிந்து 5.52 மணிக்கு ரெயில்வே கேட் திறக்கப்பட்டது. இதனால் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடாமங்கலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 1 ரெயில்வே கேட் மூடப்பட்டதால் பஸ் பயணிகள், நெடுஞ்சாலை பயணிகள் உள்ளிட்டோர் அவதிப்பட்டனர். இந்த நிலையை போக்கிட நீடாமங்கலத்தில் மேம்பாலம் கட்டும் பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Related Tags :
Next Story