அதானி மீதான புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அவசியம்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்


அதானி மீதான புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அவசியம்-கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தல்
x

அதானி மீதான புகாரை விசாரிக்க நாடாளுமன்ற கூட்டுக்குழு அவசியம் என கார்த்தி சிதம்பரம் எம்.பி. வலியுறுத்தினார்.

புதுக்கோட்டை

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரம் ஆலங்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தி.மு.க. தலைமை மற்றும் கூட்டணி கட்சிகள் மீது மக்கள் வைத்த நம்பிக்கையின் எதிரொலியாக ஈரோடு இடைத்தேர்தலில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சரான பிறகு நடைபெறும் முதல் இடைத்தேர்தல் என்பதால் அனைத்து அமைச்சர்களும் தங்கள் கட்சியின் பலத்தை நிரூபிக்க தேர்தல் பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இடைத்தேர்தலுக்கென்று ஒரு இலக்கணம் உள்ளது. அதானியின் பங்கு சரிவினால் பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள் மற்றும் எல்.ஐ.சி. நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளன. எனவே நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து அதானியின் கணக்கு வழக்குகளை சரிபார்த்து விசாரணை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story