காகித ஆலை ஊழியர் மாயம்


காகித ஆலை ஊழியர் மாயம்
x

காகித ஆலை ஊழியர் மாயம் ஆனார்.

கரூர்

புன்னம் சத்திரம் அருகே உள்ள அதியமான் கோட்டை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 60). இவரது மகன் மணிகண்டன் (32). மாற்றுத்திறனாளியான இவர் டி.என்.பி.எல். காகித ஆலையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். மேலும் மணிகண்டன் தனது தந்தை பார்த்து வந்த டெக்ஸ்டைல் வேலையை எடுத்து செய்ததில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து காணப்பட்ட மணிகண்டன் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் இரவு நேரம் வெகுநேரம் ஆகியும் வீட்டிற்கு வரவில்லையாம். இதையடுத்து பல்வேறு இடங்களில் தேடியும் மணிகண்டன் கிடைக்கவில்லை. இதுகுறித்து மணிகண்டனின் தாய் புஷ்பலதா (51) கொடுத்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிந்து, மாயமான மணிகண்டனை தேடி வருகின்றனர்.


Next Story