பேன்சி கடையில் திருட்டு


பேன்சி கடையில் திருட்டு
x

பேன்சி கடையில் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை பஸ் நிலையத்தின் எதிரே பெண்ணாடம் அடுத்த கொட்டாரம் கிராமத்தை சேர்ந்த மெய்கண்டன் என்பவர் பேன்சி ஸ்டோர் மற்றும் குளிர்பான கடையை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது கடையின் உள்ளே புகுந்த 4 மர்ம ஆசாமிகள் ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர். இது குறித்து மெய்கண்டன் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story