கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட ஊராட்சி பணியாளர்கள்


கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்ட ஊராட்சி பணியாளர்கள்
x

4 மாத சம்பளத்தை வழங்கக்கோரி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி பணியாளர்கள் திரண்டனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்களுக்கு கடந்த 4 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பணியாளர்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து நேற்று மாலை ஒன்றிய பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் 50-க்கும் மேற்பட்டோர் மாநில துணைத்தலைவர் திரவியராஜ் தலைமையில் கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத்தொடர்ந்து வட்டார வளர்ச்சி அதிகாரியிடம் 4 மாத சம்பளத்தை வழங்கக்கோரி மனுக்களை கொடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி உறுதி அளித்தார். இதையடுத்து ஊராட்சி பணியாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி பணியாளர்கள் திரண்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story