வீட்டில் பிணமாக கிடந்த பெயிண்டர்


வீட்டில் பிணமாக கிடந்த பெயிண்டர்
x

வீட்டில் பெயிண்டர் பிணமாக கிடந்தார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் புறநகர் பகுதியான அரணாரை வடக்கு காலனியை சேர்ந்தவர் சிவராஜ்(வயது 46). இவருக்கு பாஞ்சோலை என்ற மனைவியும் ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். பெயிண்டரான சக்திவேல் நேற்று முன்தினம் இரவு குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததாகவும், வீட்டில் உள்ள அனைவரையும் வெளியே தள்ளிவிட்டு, வீட்டிற்குள் சென்று கதவை உள்புறமாக தாழிட்டுவிட்டு தூங்கியதாகவும் கூறப்படுகிறது. நேற்று காலை அவரது குடும்பத்தினர் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த அவர்கள் பின்புறம் வழியாக உள்ளே சென்று பார்த்தபோது சிவராஜ் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தார். மேலும் அவரது உடல் அருகே பாதி குடித்த நிலையில் மது பாட்டிலும், பூச்சி கொல்லி மருந்து (விஷம்) பாக்கெட்டும் கிடந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சிவராஜின் உடலை கைப்ப்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிவராஜ் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story