3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - தமிழக அரசு


3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் - தமிழக அரசு
x

3 சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிப்புக்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது,

முதல்-அமைச்சர், 75-வது சுதந்திர தின உரையில் மத்திய அரசுப் பணியாளர்களுக்கு இணையாக மாநில அரசுப் பணியாளர்களுக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கிடும் கோரிக்கையை ஏற்று, கடுமையான நிதிச்சுமைக்கு இடையிலும் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 1.7.2022 முதல் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின்படி, தலைமைச் செயலாளர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து தமிழ்நாடு அரசின் ஊழியர்களுக்கும் இந்த அகவிலைப்படி1.7.2022 முதலே உயர்த்தி வழங்கப்படும். இதற்கான அரசாணைகள் விரைவில் தனித்தனியே வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story