டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு


டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவு
x

டாஸ்மாக் கடைகளை 3 நாட்கள் மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் நாளை 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை 3 நாட்கள் நடைபெற உள்ள தேவர் குருபூஜை விழாவினை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்படும் அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்கள், உரிமம் பெற்ற தனியார் பார்கள் அனைத்தும் மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி இந்த 3 நாட்களில் மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீதும், மதுபானங்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து இருந்தாலோ அல்லது மதுபான வகைகளை ஒரு இடத்திலிருந்து பிற இடத்திற்கு எடுத்துச் சென்றாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.


Next Story