ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..

மதுரை


ரசாயனம் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது..

ஐகோர்ட்டில் மனு

இந்து முன்னணியை சேர்ந்த அரசுப்பாண்டி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பிரமாண்ட சிலைகள் செய்து ஆறு, குளம் மற்றும் கிணறுகளில் கரைக்கப்படுகிறது. ஆனால், இந்த சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரீஸ் மற்றும் ரசாயன வண்ணங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. இதனால் தண்ணீர் மாசுபடுகிறது. இது உடல் நலத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கிறது. எனவே, மதுரையில் களிமண் சிலைகளை மட்டும் செய்ய அனுமதி அளித்து, அதனை ஆறு, குளத்தில் கரைக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நேற்று முன்தினம், தமிழக அரசு தரப்பில் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டது.

ரசாயனம் கலக்காத சிலைகள்

இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நீதிபதி குமரப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், "மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விதித்துள்ள நிபந்தனைகளையும், விதிகளையும் பின்பற்றி விநாயகர் சிலைகள் கரைக்க அனுமதிக்கப்படுகிறது" என தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, "மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் பசுமை தீர்ப்பாயம் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றி மட்டுமே விநாயகர் சிலைகளை செய்ய வேண்டும். இந்த விதிமுறைகளை பின்பற்றி ரசாயன கலப்படம் இல்லாத விநாயகர் சிலைகளை மட்டுமே நீர் நிலைகளில் கரைக்க வேண்டும்" என்று உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் முடித்து வைத்தனர்.


Next Story