ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்


ஒரு வாரம் தரிசனம் செய்ய அனுமதி வேண்டும்
x

2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

2 ஆண்டுகளுக்கு பிறகு சதுரகிரியில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. இதில் ஒரு வாரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

சதுரகிரி கோவில்

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த ேகாவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இந்த திருவிழா நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி வருகிற 26-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை பிரதோஷம், ஆடி அமாவாசை திருவிழாவிற்கு 4 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கூடுதல் நாட்கள் அனுமதி

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-

சதுரகிரி கோவிலில் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது வழக்கம்.

2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சதுரகிரி கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நாட்கள் போதுமானதாக இல்லை. எனவே 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக 3 நாட்கள் அனுமதி அளித்து ஒரு வாரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story