சிவகங்கையில் மேலும் ஒரு புகார்: எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு
சிவகங்கையில் மேலும் ஒரு புகாரில் எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிவகங்கை
சிவகங்கை நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவருமான துரை ஆனந்த், சிவகங்கை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சிவகங்கை நகர பா.ஜ.க. சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தை பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா தொடங்கி வைத்தார். அப்போது அவர் தி.மு.க. தலைவர்களை அவதூறாகவும், மத மோதலை உருவாக்கும் விதமாகவும் பேசினார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி, எச்.ராஜா மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.
Related Tags :
Next Story