முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை


முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

திருத்தங்கல் பகுதியை சேர்ந்தவர் விக்டர்அந்தோணி ராஜ் (வயது 62). இவர் 3 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விக்டர் அந்தோணிராஜை திருத்தங்கல் போலீசார் கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பூர்ண ஜெய ஆனந்த் விசாரித்து விக்டர்அந்தோணி ராஜுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 2,000 அபராதம் விதித்தும் தீர்ப்பு கூறினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.7 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்தார்.


Related Tags :
Next Story