மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு


மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் சாவு
x
தினத்தந்தி 28 Sep 2022 6:45 PM GMT (Updated: 28 Sep 2022 6:46 PM GMT)

சங்கரன்கோவில் அருகே மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் இறந்தார்.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள என்.ஜி.ஓ. காலனி பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (வயது 78). இவர் நேற்று முன் தினம் இரவு என்.ஜி.ஓ. காலனியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிள் மோதி ராஜமாணிக்கம் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த அவரை சங்கரன்கோவில் தாலுகா போலீசார் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜமாணிக்கம் பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து சங்கரன்கோவில் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story