கிணற்றில் முதியவர் பிணம்


கிணற்றில் முதியவர் பிணம்
x

கிணற்றில் முதியவர் பிணமாக மிதந்தார்.

பெரம்பலூர்

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது கிணற்றில் முதியவர் ஒருவர் நேற்று பிணமாக மிதந்தார். இதனை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அரும்பாவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிணற்றில் மிதந்த முதியவரின் உடலை மீட்டு, விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்து கிடந்தவர் வெங்கலம் கிராமத்தை சேர்ந்த கணபதி (வயது 80) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து கணபதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story