முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை


முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 9 Jun 2023 7:45 PM GMT (Updated: 10 Jun 2023 5:39 AM GMT)

முதியவர் தூக்குப்போட்டு தற்கொலை

கோயம்புத்தூர்

ஆர்.எஸ்.புரம்

கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பி.என்.புதூர் நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம் (வயது 70). இவருடைய மனைவி கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் உடல் நலக்குறைவால் இறந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த பாலசுப்பிரமணியம் அக்டோபர் மாதம் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

இந்தநிலையில் மனைவி இறந்த துக்கத்தில் இருந்த பாலசுப்பிரமணியம் கடந்த 7-ந் தேதி இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட பாலசுப்பிரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Next Story