மொபட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி


மொபட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலி
x

மொபட்டில் இருந்து தவறி விழுந்து மூதாட்டி பலியானார்.

கரூர்

குளித்தலை அருகே உள்ள ரெத்தினத்தான்பட்டி பகுதியை சேர்ந்தவர் அங்கம்மாள் (வயது 80). இவர் நேற்று முன்தினம் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்காக கணக்கப்பிள்ளையூரில் உள்ள ரேஷன் கடைக்கு தனது பேரன் சரவணனுவுடன் மொபட்டில் சென்றுள்ளார். பின்னர் ரேஷன் பொருட்கள் வாங்கிவிட்டு பின்னர் மீண்டும் 2 பேரும் தங்கள் ஊருக்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தனர். கணக்கப்பிள்ளையூர்-மேலப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கம்மாள் மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story