கிணற்றில் மூதாட்டி பிணம்


கிணற்றில் மூதாட்டி பிணம்
x

கிணற்றில் மூதாட்டி பிணம் மீட்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள மாரனேரி போடுரெட்டியபட்டியை சேர்ந்தவர் வெங்கடசாமி மனைவி லட்சுமியம்மாள் (வயது 80). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் வெங்கடசாமி இறந்துவிட்டார். இதை தொடர்ந்து வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட லட்சுமியம்மாள் தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் சம்பவத்தன்று அதேபகுதியில் உள்ள கிணற்றில் லட்சுமியம்மாள் பிணமாக மிதந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் சம்பவம் நடைபெற்ற கிணற்றுக்கு சென்றனர். அங்கு மூதாட்டி லட்சுமியம்மாள் உடலை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர், இந்த சம்பவம் குறித்து லட்சுமியம்மாள் மகன் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story