கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி


கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 21 Feb 2023 6:45 PM GMT (Updated: 21 Feb 2023 6:46 PM GMT)

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனம் சார்பில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி வருகிற 27-ந் தேதி நடக்கிறது

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டம் 1952-ன் கீழ் முதலாளிகள், ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக 2023-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான 'நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சி' வருகிற 27-ந் தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு, திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்பட 12 மாவட்டங்களில் நடைபெற உள்ளது.

இதில் கடலூரில் நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்திலும், விழுப்புரம் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் செயல்படும் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் அலுவலகத்திலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உளுந்தூர்பேட்டை கிழக்கு கந்தசாமிபுரம் ஸ்ரீசாரதா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. எனவே மேற்குறிப்பிட்ட மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் திருச்சி மண்டல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பி.எப். ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கொண்ட அனைத்து உறுப்பினர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் நிதி ஆப்கே நிகத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, குறைகளை நிவர்த்தி செய்யலாம். மேற்கண்ட தகவலை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன கமிஷனர் முருகவேல் தெரிவித்துள்ளார்.


Next Story