அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் - ஜெயக்குமார் பேட்டி


அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் -  ஜெயக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 15 Jun 2023 4:53 AM GMT (Updated: 15 Jun 2023 5:36 AM GMT)

அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீது புகார் வந்தவுடன், அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கியவர் ஜெயலலிதா. குற்றச்சாட்டு இருந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 30% அடைப்புக்கு ஆஞ்சியோகிராம் செய்தது உலகிலேயே இங்கேதான். இன்றைக்கு தவறு செய்தவர்கள் நாளை தண்டிக்கப்படுவார்கள். அடுத்த ஆண்டு ஆஸ்கர் விருது கொடுக்க வேண்டும் என்றால் அதை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் கொடுக்க வேண்டும் என்றார்.


Next Story