செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை குத்துவிளக்கேற்றி அமைச்சர்கள் மற்றும் ஆதீனங்கள் தொடங்கி வைத்தனர்.

* போலந்து, உக்ரைன் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.

* பிரதமர் மோடியுடனான ஜெலன்ஸ்கியின் புகைப்படம் சமூக வலைதளத்தில் 15 லட்சத்துக்கு மேல் 'லைக்ஸ்'களை அள்ளி சாதனை படைத்துள்ளது.

* நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது.

* திமுக அரசின் சாதனைகளுக்கு மகுடமாக பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுவதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

* செங்கடலில் கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு சென்ற கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியதில் கப்பல் தீ பிடித்து எரிந்தது.

* வக்பு வாரிய திருத்தச்சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முக்கிய பா.ஜ.க. கூட்டணி கட்சிகளுடன் நிதிஷ் குமாரும் இணைந்துள்ளார்.

* இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் ஓய்வு முடிவை அறிவித்துள்ளார்.

* சென்னை அருகே இந்தியாவின் முதல் மறு பயன்பாட்டு ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

* மேகதாது திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்குமாறு கோரி மத்திய அரசுக்கு கர்நாடக அரசு மீண்டும் கடிதம் எழுதியுள்ளது.

* பார்முலா4 கார்பந்தயத்தின் முதல் சுற்று இருங்காட்டுகோட்டையில் இன்றும், நாளையும் நடக்கிறது.


Next Story