செய்திகள் சில வரிகளில்......


செய்திகள் சில வரிகளில்......
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக போலந்து சென்றடைந்தார்.

* தமிழ்நாடு தொழில் முதலீடு மாநாட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

* டாக்டர்கள் பாதுகாப்புக்காக தேசிய பணி குழு அமைத்த சுப்ரீம் கோர்ட்டுக்கு எய்ம்ஸ் டாக்டர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

* கல்குவாரி வெடிவிபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்ததோடு, அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

* குரங்கு அம்மை நோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் அறிவித்துள்ளது.

* தமிழ்நாட்டில் இதுவரை ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொள்கிறார்.

* முழு வாழ்வையும் மக்களுக்காக செலவிட்டவர் என கமலா ஹாரிசுக்கு பராக் ஒபாமா புகழாரம் சூட்டியுள்ளார்.

* கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த உள்ளது.

* பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.

* ஐ.சி.சி.யின் தற்போதைய தலைவராக உள்ள 'கிரேக் பார்க்லே'வின் பதவிக்காலம் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story