செய்திகள் சில வரிகளில்......
![செய்திகள் சில வரிகளில்...... செய்திகள் சில வரிகளில்......](https://media.dailythanthi.com/h-upload/2024/07/01/1631104-01.webp)
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.
சென்னை,
* பிரதமர் மோடியோ, பா.ஜனதாவோ இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அல்ல - ராகுல்காந்தி பேச்சால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது.
* மாநில கல்வி கொள்கை தொடர்பான 650 பக்க அறிக்கை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
* புதிய குற்றவியல் திருத்த சட்டங்கள் மூலம் விரைவாக நீதி கிடைக்கும் என்று உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார்.
* நீட் குறித்து பேச அனுமதி மறுத்ததால் நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
* இந்திய ராணுவத்தின் புதிய தளபதியாக உபேந்திர திவேதி பொறுப்பேற்றார்.
* இலங்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எம்.பி.யுமான இரா.சம்பந்தன் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
* ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்: டென்மார்க்கை வீழ்த்தி ஜெர்மனி காலிறுதிக்கு தகுதி பெற்றது. அதுபோல சுலோவாக்கியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறியது.
* போர்ப்பதற்றம்: லெபனானை விட்டு வெளியேற குடிமக்களுக்கு சவுதி அரேபியா அறிவுறுத்தி உள்ளது.
* வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியது.
* தமிழ்நாட்டில் முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
* விராட் மற்றும் ரோகித் இன்னும் 2 ஐ.சி.சி. தொடர்களில் விளையாடுவார்கள் என்று பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா கூறியுள்ளார்.