செய்திகள் சில வரிகளில்.........


செய்திகள் சில வரிகளில்.........
x

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் சில முக்கிய செய்திகளை காண்போம்.

சென்னை,

* மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா எக்ஸ்பிரஸ் ரெயில் மீது பின்னால் வந்த சரக்கு ரெயில் மோதி விபத்துக்குள்ளானது.இதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

* டி20 உலகக்கோப்பை: நெதர்லாந்தை வீழ்த்தி இலங்கைஆறுதல் வெற்றி பெற்றது.

* சவுதி அரேபியாவில் வெப்ப அலையால், ஜோர்டானை சேர்ந்த 14 யாத்ரீகர்கள் மற்றும் ஈரானை சேர்ந்த 5 பேர் என மொத்தம் 19 பேர் உயிரிழந்து உள்ளனர்.

* பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கும், கடலில் மூழ்கி உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* டி20 உலகக் கோப்பை: நேபாளத்தை வீழ்த்தி சூப்பர் 8 சுற்றுக்கு வங்காளதேசம் முன்னேறியது

* சோமாலியாவில் ராணுவ வாகனத்தை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 8 வீரர்கள் பலியானார்கள்.

* பாலியல் துன்புறுத்தல் வழக்கு தொடர்பாக கர்நாடக முன்னாள் முதல் - மந்திரி எடியூரப்பா இன்று சி.ஐ.டி. போலீசார் முன்பு ஆஜர் ஆனார்.

* உக்ரைனில் அமைதி ஏற்படுத்துவது தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடந்த அமைதி கூட்டத்தில் இந்தியா பங்கேற்ற போதிலும் தீர்மானங்களில் கையெழுத்திட மறுத்து விட்டது.

* பாகிஸ்தானில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ராணுவம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.


Next Story