சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு


சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 20 May 2022 7:26 PM GMT (Updated: 20 May 2022 7:29 PM GMT)

சர்வதேச கருத்தரங்கில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

அரியலூர்

தாமரைக்குளம்:

அரியலூர் அரசு கலைக்கல்லூரி சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் சமீபத்தில் திருச்சியில் சர்வதேச அளவில் நடைபெற்ற காலநிலை தழுவல் மற்றும் விரிதிறன் கருத்தரங்கில் பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளனர். கருத்தரங்கில் காலநிலை மாற்றம் குறித்தும், அதன் விளைவுகள் குறித்தும், தண்ணீரின் தன்மை மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் தொடர்பான விளக்க காணொலி காண்பிக்கப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட சுற்றுச்சூழல் பிரிவு மாணவர்களை அரியலூர் கலைக் கல்லூரி முதல்வர் மலர்விழி பாராட்டினார். மேலும் சுற்றுச்சூழலை காக்க மாணவர்கள் அனைவரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும், என்று கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் துறைத் தலைவர் ராஜசேகர் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.


Next Story