சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு


சதுரகிரியில்  அமாவாசை சிறப்பு வழிபாடு
x

சதுரகிரியில் அமாவாசை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விருதுநகர்

வத்திராயிருப்பு,

மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு அதிகாலை முதல் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் வரிசையில் நின்று மலைப்பாதை வழியாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு நடந்து, மலை ஏறிச்சென்றனர்.

சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றது. சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


Next Story