தேவதானப்பட்டி அருகே வீட்டில் தலையில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி


தேவதானப்பட்டி அருகே  வீட்டில் தலையில் காயங்களுடன் கிடந்த மூதாட்டி
x

தேவதானப்பட்டி அருேக வீட்டில் தலையில் காங்களுடன் மூதாட்டி கிடந்தார்

தேனி

தேவதானப்பட்டி அருகே உள்ள நல்லகருப்பன் பட்டியை சேர்ந்த முத்து வீராச்சாமி மனைவி சின்னம்மாள் (வயது 75). முத்து வீராச்சாமி இறந்துவிட்டதால் சின்னம்மாள் தனது மகள் கிரிஜாவுடன் (38) வசித்து வருகிறார். கிரிஜா குழந்தைகள் நல அமைப்பில் சமூக சேவகராக பணியாற்றி வருகிறார். நேற்று இவர், வேலைக்கு சென்றுவிட்டார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது கதவு திறந்த நிலையில் இருந்தது.

வீட்டின் உள்ளே சென்றபோது சமையல் அறையில் சின்னம்மாள் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் சின்னம்மாளை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதற்கிடையே தகவல் அறிந்த தேவதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னம்மாளை யாரேனும் கொலை செய்ய முயன்றனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story