ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதல்; 3 பேர் காயம்


தினத்தந்தி 25 Oct 2023 6:45 PM GMT (Updated: 26 Oct 2023 8:28 AM GMT)

ஆறுமுகநேரி அருகே மோட்டார் சைக்கிள் மீது டிரக்கர் மோதிய விபத்தில் 3 பேர் காயம் அடைந்தனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

முத்தையாபுரம் முத்தம்மாள் புரத்தை சேர்ந்த தங்கவேல் நாடார் மகன் பொன்ராஜ் (வயது 50). இவரது மகன் முகிலன் (17), மகள் தனலட்சுமி(16). இவர்கள் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் முடிந்து, நேற்று காலையில் முத்தையாபுரத்துக்கு 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். ஆறுமுகநேரி அருகிலுள்ள சாகுபுரம் வளைவில் சென்ற போது எதிரே தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த டிரக்கர் வேன் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இவர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் ேசர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரக்கர் ஓட்டி வந்த வீரபாண்டியன்பட்டணத்தை சேர்ந்த லோகநாதன் மகன் சேகர் என்பவரை கைது செய்தனர்.


Next Story