மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா


மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா
x

வாய்மேடு பகுதியில் மாரியம்மன் கோவில்களில் நவராத்திரி விழா நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த வண்டுவாஞ்சேரி வண்டுறை மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் 4-வது நாளையொட்டி அம்மனுக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர், தேன், திருநீறு, உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, பின்னர் சந்தனக்காப்பு சாத்தப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல் தலைஞாயிறை அடுத்த சமயபுரத்து மாரியம்மன் கோவில் நவராத்திரி விழா நடைபெற்றது.


Next Story