நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்


நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 5 Nov 2022 6:45 PM GMT (Updated: 5 Nov 2022 6:46 PM GMT)

எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது

தூத்துக்குடி

தூத்துக்குடி எஸ்.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தாளமுத்து நகரில் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மாணவர்கள் மத நல்லிணக்கம், கொரோனா விழிப்புணர்வு, புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு, குழந்தைப்பாதுகாப்பு, பாலிதீன் ஒழிப்பு போன்ற விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தினர். மேலும் அங்குள்ள கோவில் வளாகம், பள்ளி வளாகம் ஆகியவற்றை தூய்மைப்படுத்தினர். இந்த சிறப்பு முகாம் திட்ட அலுவலர் சேதுராமலிங்கம், உதவி திட்ட அலுவலர் செந்தூர் செல்வி ஆகியோர் மேற்பார்வையில் நடந்து வருகிறது.


Next Story