முளைப்பாரி திருவிழா
மானாமதுரை அருகே முளைப்பாரி திருவிழா நடைபெற்றது.
சிவகங்கை
மானாமதுரை
மானாமதுரை அருகே உள்ள மேலப்பசலை ஊராட்சிக்குட்பட்ட அரிமண்டபம் ராஜாக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் உலக நன்மைக்காகவும், விவசாயம் செழிக்க வேண்டியும் முளைப்பாரி உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு விழா ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கியது. முளைப்பாரி எடுக்க இருந்த பெண்கள் கையில் காப்பு கட்டி விரதம் இருந்து முளைப்பாரி ஓடுகளில் நவதானியங்களை விதைத்தனர். பின்னர் கோவில் முன்பு வைத்து 7 நாட்களாக கும்மிபாட்டு, ஒயிலாட்டம் நடந்தது. விழாவையொட்டி சுந்தரவல்லி அய்யனார் கோவிலில் இரவு படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது.
ஏராளமான பெண்கள் முளைப்பாரிகளை எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அதன் பின்னர் அங்கிருந்த நீர்நிலைகளில் முளைப்பாரிகளை கரைத்தனர்.
Related Tags :
Next Story