மோட்டார் சைக்கிள் லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு
கமுதி அருகே மோட்டார் சைக்கிள் லாரி நேருக்கு நேர் மோதி விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே கருங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் குருவு ( வயது 65). இவர் இன்று கீழராமநதி கிராமத்தில் இருந்து கமுதி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது பெருமாள்தேவன்பட்டி விலக்கு ரோடு அருகே சென்றபோது எதிரே வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் குருவு சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்து வந்த கமுதி போலீசார் முதியவர் குருவு உடலை கைப்பற்றி கமுதி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது மனைவி தெய்வகனி (60), அளித்த புகாரின் பேரில், கமுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, லாரி டிரைவர் பூமிநாதனை(45) கைது செய்து விசரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story