மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்


மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
x

மானூரில் மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்.

திருநெல்வேலி

மானூரை சேர்ந்தவர் மாயாண்டி பிரபு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நெல்லை சந்திப்பு அரவிந்த் கண் ஆஸ்பத்திரி அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தாராம். அந்த சைக்கிளை மர்மநபர் திருடி சென்றதாக மாயாண்டி பிரபு, நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்ற சிவா (வயது 20) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் சிதம்பரம் என்ற சிவாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story