மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

திசையன்விளையில் கோவில் பூசாரியின் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை சுடர்நகர் வெற்றிவிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43). சுடலை ஆண்டவர் கோவில் பூசாரியாக உள்ளாார். இவர் நேற்று முன்தினம் இரவு தனது மோட்டார் சைக்கிளை வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். நேற்று காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டதாக திசையன்விளை போலீசில் சிவகுமார் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் உதய லெட்சுமி வழக்குப்பதிவு செய்து திருட்டு நடந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.


Next Story