மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

களக்காடு அருகே மோட்டார் சைக்கிள் திருடப்பட்டது.

திருநெல்வேலி

களக்காடு:

களக்காடு அருகே உள்ள மேல மாவடியை சேர்ந்தவர் நாராயண பெருமாள் மகன் செல்வராஜ் (வயது 37). இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஓட்டி வருகிறார். சம்பவத்தன்று இவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை, அவரது உறவினர் அதே ஊரைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணபெருமாள் எடுத்து சென்றார். சாலைப்புதூர் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனது நண்பரை பார்க்க சென்றுள்ளார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி செல்வராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story