மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

நெல்லை தச்சநல்லூரில் மோட்டார் சைக்கிள் திருடு போனது.

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் கண்ணன் (வயது 33). இவர் தனது மோட்டார் சைக்கிளை தன் வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாராம். நேற்று காலையில் பார்த்த போது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story