மோட்டார் சைக்கிள் திருட்டு


மோட்டார் சைக்கிள் திருட்டு
x

மோட்டார் சைக்கிள் திருடிய மர்ம நபரை போலீசார் தேடிவருகிறார்கள்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரை சேர்ந்த தர்மராஜ் மகன் ராஜாராம் (வயது 32). இவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த 17-ந் தேதி தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்த போது மர்மநபர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ராஜாராம் நெல்லை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story