லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி


லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் பலி
x

லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு ஏரிக்கரை தெருவை சேர்ந்தவர் ரவி மகன் பிரதீப் (வயது 19). இவர் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பி.எஸ்சி. இயற்பியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தனது மோட்டார் சைக்கிளில் விழுப்புரம் வந்துவிட்டு மீண்டும் அங்கிருந்து மாம்பழப்பட்டுக்கு புறப்பட்டார். காணை அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் மீது எதிர்பாராதவிதமாக பிரதீப்பின் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

விபத்து குறித்த தகவல் அறிந்ததும் காணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரதீப்பின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story