மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதி சகோதரர்கள் பலி


மாட்டு வண்டியில் மோட்டார்சைக்கிள் மோதி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விருதுநகர்

காரியாபட்டி,


மாட்டு வண்டியில் மோட்டார்சைக்கிள் மோதி சகோதரர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சகோதரர்கள்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்திரன் (வயது 36). இவருடைய தம்பி மணிகண்டன் (25). தேனூர் கிராமத்தில் இருந்து இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் காரியாபட்டிக்கு வந்தனா். பின்னர் அவர்கள் வீட்டிற்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தனர். முடுக்கன்குளம் அருகே சென்றபோது அந்த வழியாக சென்ற மாட்டு வண்டியில் மோட்டார் சைக்கிள் மோதியதாக கூறப்படுகிறது. இதில் பாலச்சந்திரன், மணிகண்டன் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக காரியாபட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

2 பேர் பலி

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர், ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து பாலச்சந்திரன், மணிகண்டன் ஆகியோரின் உடல்களை அ.முக்குளம் போலீசார் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலியான பாலச்சந்திரனுக்கு திருமணமாகி மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். மணிகண்டனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. சகோதரர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.


Related Tags :
Next Story