2 குழந்தைகளுடன் தாய் மாயம்


2 குழந்தைகளுடன் தாய் மாயம்
x

2 குழந்தைகளுடன் தாய் மாயமானார்.

அரியலூர்

மீன்சுருட்டி:

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரம் கணக்க விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் பாரி(வயது 57). இவருடைய மகள் பரிமளா(29). இவருக்கும், மீன்சுருட்டி அருகே உள்ள பாகல்மேடு கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியனின் மகன் இளங்கோவனுக்கும் திருமணம் நடைபெற்று, பிரியதர்ஷினி(7) என்ற மகளும், பவின்(3) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு ஆண்டாக கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரிமளா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்த பரிமளாவின் தந்தை பாரி, அவர்கள் 3 பேரையும் உறவினர்கள் வீடுகள் மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து பாரி கொடுத்த புகாரின்பேரில் மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிவு செய்து பரிமளா மற்றும் அவரது குழந்தைகளை தேடி வருகிறார்.


Next Story