லாரி மீது மொபட் மோதல்; விவசாயி படுகாயம்
லாரி மீது மொபட் மோதியதில் விவசாயி படுகாயம் அடைந்தார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 38), விவசாயி. இவர் நேற்று தனது மொபட்டில் அரியலூரில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது திருச்சி-சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் தத்தனூர் மேலூரில் சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி மீது மொபட்டை மோதினார். இதில் பலத்த காயம் அடைந்த சிலம்பரசனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story