மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி


மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
x

கோப்புப்படம் 

பிரதமர் மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தோப்புபாளையத்தில் பா.ஜ.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது. இந்த முகாமை நேற்று தெலுங்கானா மாநில முன்னாள் கவர்னரும், பா.ஜ.க மூத்த நிர்வாகியுமான தமிழிசை சவுந்தரராஜன் ஆய்வு செய்தார். முன்னதாக ஈரோடு அருகே வெள்ளித்திருப்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகிறார். ஆனால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தி.மு.க. ஆட்சியைத்தான் காமராஜர் ஆட்சி என்று கூறிவருகிறார். கார்த்திக் சிதம்பரம் வேறொரு காமராஜர் ஆட்சி குறித்து பேசுகிறார்.

எங்களை பொறுத்தவரை மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சி. ஏனென்றால் வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடிதான் கொண்டு வருகிறார். காமராஜரும் வளர்ச்சி திட்டங்களைத்தான் கொண்டு வந்தார். அதே மாதிரி காமராஜர் ஊழல் இல்லாத ஆட்சியை கொடுத்தார். அதே போல் மோடி தலைமையில் ஊழல் இல்லாத ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story