காணாமல் போன திருச்செந்தூர் மீனவர்களை மீட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்


காணாமல் போன திருச்செந்தூர் மீனவர்களை மீட்க வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 4 Aug 2022 10:43 AM GMT (Updated: 4 Aug 2022 10:43 AM GMT)

காணாமல் போன திருச்செந்தூர் மீனவர்களை மீட்க வேண்டும் என்று சீமான் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருச்செந்தூர் அமலிநகர் பகுதியைச் சேர்ந்த பிரசாத், அஷ்வின், நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய 4 மீனவர்கள் கடந்த 1-ந்தேதி அன்று பைபர் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றபோது, நள்ளிரவில் எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான செய்தியறிந்து மன வேதனையடைந்தேன்.

படகு விபத்தில் சிக்கிய நால்வரில் நித்தியானந்தம் மற்றும் பால்ராஜ் ஆகிய இரு மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில், பிரசாத், அஷ்வின் ஆகிய இருவர் விபத்து நடந்து 2 நாட்களாகியும் மீட்கப்படாதது மிகுந்த கவலையளிக்கிறது.

மத்திய, மாநில அரசுகளின் அலட்சியப்போக்கே மீனவர்களை மீட்பதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கு முக்கிய காரணமென அப்பகுதி மீனவச்சொந்தங்கள் வேதனைத் தெரிவிக்கின்றனர். எனவே, காணாமல் போன மீனவர்களை மீட்பதற்குக் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story