காமராஜர் சிலைக்கு அமைச்சர், கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை


காமராஜர் சிலைக்கு அமைச்சர், கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை
x

பிறந்தநாள் விழாவையொட்டி காமராஜரின் சிலைக்கு அமைச்சர், கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர்

பிறந்தநாள் விழாவையொட்டி காமராஜரின் சிலைக்கு அமைச்சர், கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்தநாள் விழா

காமராஜரின் பிறந்தநாள் விழா அவரது பிறந்த ஊரான விருதுநகரில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு கலெக்டர் மேகநாத ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஆகியோர் மரியாதை செலுத்தினர். இதனை தொடர்ந்து காமராஜர் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கும் கலெக்டர் மேகநாத ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அதிகாரி திலகவதி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காமராஜர் நினைவு இல்லத்தின் முன்பு பெண்களின் நூற்புவேள்வி நடந்தது. காமராஜர் நினைவு இல்லம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அமைச்சர் மரியாதை

விருதுநகர் கச்சேரி ரோட்டில் உள்ள காமராஜர் நூற்றாண்டு மணிமண்டபத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். கலெக்டர் மேகநாத ரெட்டி, போலீஸ் சூப்பிரண்டு மனோகர், சீனிவாசன் எம்.எல்.ஏ உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விருதுநகர் நகரசபை அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு நகரசபை தலைவர் மாதவன், துணை தலைவர் தனலட்சுமி, கமிஷனர் தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அலுவலர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் - பா.ஜ.க.

இதனை தொடர்ந்து சிவகாசி மேயர் சங்கீதா இன்பம் நகரசபை அலுவலகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீ ராஜாசொக்கர் மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் காமராஜருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அ.தி.மு.க.வினர் மணிமண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பா.ஜ.க. கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் பா.ஜ.க.வினர் காமராஜர் நினைவில்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மக்கள் நீதி மய்யம் சார்பில் மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ் தலைமையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பா.ம.க. மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் தென் மாவட்ட செயலாளர்கள் காமராஜர் நினைவு இல்லத்திலும், மணிமண்டபத்திலும் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகங்களும் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

பட்டிமன்றம்

விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் இந்நகர் ராமமூர்த்தி ரோட்டில் உள்ள தனியார் திருமண அரங்கில் சுகிசிவம் தலைமையில் காமராஜர் புகழுக்கு பெரிதும் காரணம் குணநலனா? செயல் திறனா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.


Next Story