தர்மபுரியில் போலீசார் சார்பில்மாதாந்திர ஆய்வு கூட்டம்


தர்மபுரியில் போலீசார் சார்பில்மாதாந்திர ஆய்வு கூட்டம்
x
தினத்தந்தி 18 March 2023 7:00 PM GMT (Updated: 18 March 2023 7:00 PM GMT)
தர்மபுரி

தர்மபுரி மாவட்ட போலீசார் சார்பில் மாதாந்திர ஆய்வு கூட்டம் தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜோசு பாதம் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் பற்றிய விவரங்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

போலீஸ் நிலையங்களுக்கு வரும் பொதுமக்களின் கோரிக்கைகளை போலீசார் கனிவுடன் கேட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அறிவுறுத்தினார். இந்த கூட்டத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் செந்தில்குமார், இமயவர்மன், ராதாகிருஷ்ணன், ரவிக்குமார், சிந்து மற்றும் அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தைத் தொடர்ந்து போலீஸ் நிலையங்களில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story