நகைக்கடை உரிமையாளரின் மகள் மாயம்


நகைக்கடை உரிமையாளரின் மகள் மாயம்
x

நகைக்கடை உரிமையாளரின் மகள் மாயமானார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

நகைக்கடை உரிமையாளர்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரை சேர்ந்த பிரபல தனியார் நகைக்கடையின் உரிமையாளர் சரவணன்-தேவகி தம்பதியின் மகள் ஓவியா(வயது 24). இவர் கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் டாக்டராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் இவர் கடந்த 9-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரது பெற்றோர்கள், அவரை அக்கம், பக்கத்தில் உள்ள உறவினர்கள், தோழிகள் வீடுகள் என பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

போலீசார் விசாரணை

இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் தேவகி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி ஓவியாவை தேடி வருகின்றனர்.


Next Story