நர்சிங் மாணவி மாயம்


நர்சிங் மாணவி மாயம்
x

நர்சிங் மாணவி மாயமானார்.

கரூர்

தோகைமலை அருகே உள்ள ஊர்நாயக்கம்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகள் தேன்மொழி(வயது 20). இவர் திருச்சி மாவட்டம், இனாம் குளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு நர்சிங் படித்து வருகிறார். இந்த நிலையில் இவர் பயிற்சிக்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நேற்று காலை வழக்கம் போல பயிற்சிக்கு சென்ற மாணவி மாலை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பழனிசாமி தோகைமலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தேன்மொழியை தேடி வருகின்றனர்.


Next Story