மன்னார்குடி பெத்தபெருமாள் கோவில் குடமுழுக்கு


மன்னார்குடி பெத்தபெருமாள் கோவில் குடமுழுக்கு
x

மன்னார்குடி பெத்தபெருமாள் கோவில் குடமுழுக்கு

திருவாரூர்

மன்னார்குடி காளவாய்க்கரை பகுதியில் பெத்த பெருமாள்கோவில் தெருவில் பெத்தபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வந்தது. திருப்பணிகள் நிறைவுபெற்றதையொட்டி கடந்த 11-ந்தேதி முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை மூன்றாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. காலை 9 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்று, பின்னர் சிவாச்சாரியார்கள் புனித நீரை கோபுர கலசத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். பின்னர் பெத்தபெருமாள் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story